Monday, April 25, 2016
பெற்றோருக்கான வழிகாட்டுதல் (பதிவு 1 )
குழந்தைகளுக்கு ஏன் படிப்பின் மீது ஆர்வம் இல்லை அல்லது ஆர்வம் குறைந்து காணப்படுகிறது. அவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய ஒரு கனவு அல்லது குறிக்கோள் அதன் முக்கியத்துவத்தை மனதினில் ஏற்ற வில்லை. அதனால் படிப்பதை ஒரு சுமையாக, தண்டனையாக பார்க்க ஆரம்பிக்கிறார்கள். 'உன்னுடைய கனவை அடைவதற்கு பல படிகள் உள்ளன. அதில் ஒன்று தான் நீ படிக்கும் இந்த வகுப்பு. ஒவ்வொரு படி முன்னேறி போகும்பொழுதும், உனக்கு தன்னம்பிக்கையும், சக்தியும் அதிகரிக்கும்' என்று கூறி வாருங்கள். 'உன்னால் முடியும் உன்னிடம் சக்தி இருப்பது உனக்கு தெரியாது. எனக்கு தெரியும்' என்று தன்னம்பிக்கை வார்த்தைகளை அடிக்கடி கூறி வாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment